EMIS ONLINE பணிகளுக்கு தற்காலிக ஊழியர்கள்

 பள்ளிகளில் Emis ஆன்லைன் பணிகளை பார்க்க மாவட்ட வாரியாக தற்காலிக ஊழியர்களை நியமிக்க பள்ளிகள் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் 24 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 7 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகள் 6 ஆயிரம் உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,000 அரசு பள்ளிகள் செயல்படுகின்றன… இவற்றில் படிக்கும் 50 லட்சம் மாணவ மாணவியர்கள் 2.50 லட்சம் ஆசிரியர்கள் தொடர்பான வருகை பதிவு ,விடுப்பு பதிவுகள் , மாணவர்களுக்கான நலத்திட்ட … Read more

பிப்ரவரி – 2023 மாதத்தில் அகத் தணிக்கை மேற்கொள்ளப்பட உள்ள பள்ளிகளின் பட்டியல் – மாவட்ட வாரியாக வெளியீடு!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கீழ்கண்ட அரசு / அரசு நிதியுதவி / நகராட்சி / ஆங்கிலோ இந்தியன் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை பிப்ரவரி -2023 மாதத்தில் அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு இணைப்பில் உள்ள பட்டியலின்படி பயணத் திட்டம் அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை ஆணை. Tour Plan.pdf – Download here

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – 27.01.2023

 வரும் 27. 1. 2023 பழளி கோவில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  விடப்படுகிறது…இதனை ஈடு செய்யும் பொருட்டு 25.02.23 அனைத்து அரசு அலுவலகங்கள்,பள்ளிகள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாகும்…

அரசுப் பள்ளிகளுக்கான NSS நிதியை வங்கியில் செலுத்த திட்டம்

அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் நாட்டு நலப்பணி திட்டத்துக்கு (என்எஸ்எஸ்) மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டு முதல்என்எஸ்எஸ் நிதியை பள்ளிகளின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்துவதற்கு மத்தியஅரசு முடிவெடுத்துள்ளது. இதற் காக அரசுப் பள்ளிகள் பாரத் ஸ்டேட் … Read more

மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்கு வாரந்தோறும் ‘சிக்கன்’

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் மதிய உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வாரந்தோறும் ‘சிக்கன்’ மற்றும் பழங்களை வழங்க அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு, மதிய உணவாக சாதம், காய்கறிகள், பருப்பு, முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த … Read more

நாளை ( 07.01.2023 ) பள்ளி முழு வேலை நாள் – முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு

  திருவள்ளூர் மாவட்டத்தில் மழையின் காரணமாக 04.11.2022 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை ஈடுசெய்யும் விதமாக நாளை 07.01.2023 சனிக்கிழமை அன்று அரசு / அரசு உதவிபெறும் / ஆதிந / நகராட்சி தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் அனைத்து வகை மெட்ரிக் பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படுமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை பற்றி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்களுக்கு  அசைன்மென்ட்களை வழங்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் கடந்த சில நாட்களாக அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. காலை மாலை என இரு நேரங்களிலும் மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது.  அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 15 முதல் 24 டிசம்பர் 2022 வரை நடைபெற்று வருகிறது. … Read more

அரசு பள்ளிகளை மேம்படுத்த ‘நம்ம ஸ்கூல்’திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

 அரசு பள்ளிகளை மேம்படுத்த நம்ம ஸ்கூல் என்னும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், நம்ம ஸ்கூல் என்னும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் மூலம், அரசுப் பள்ளிகளில் பயின்று தற்போது பல்வேறு தொழில் நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்களும், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்களும், சமூக அக்கறை கொண்ட நிறுவனங்களும் (என்.ஜி.ஓ) தங்களது சமூகப் பொறுப்புணர்வு … Read more