அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு – தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!

வேலைவாய்ப்பு செய்திகள் 2022 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. அகவிலைப்படி உயர்வு இன்று முதல் செயல்படுத்தி வழங்க உத்தரவு

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்: ஹிமாசல் முதல்வர்

முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று ஹிமாசல பிரதேச முதல்வராக பதவியேற்ற சுக்விந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தம் 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில், அக்கட்சி 40 தொகுதிகளில் வென்றது. இதைத் தொடா்ந்து, ஹிமாசல பிரதேச முதல்வராக சுக்விந்தா் சிங் சுக்குவும், துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரியும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். சிம்லாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆா்லேகர் பதவிப்பிரமாணம் … Read more

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்வு – முதல்வர் அறிவிப்பு

 ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்றவர்கள் உள்பட, அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் உதவித் தொகையானது வரும் ஜனவரி 1 முதல், ரூ. 1000-ல் இருந்து ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் – பஞ்சாப் அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு!

பஞ்சாபில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர இருப்பதாக முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். தீபாவளி பரிசாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என தேர்தலுக்கு முன்பாக அக்கட்சி தலைவர்கள் உறுதியளித்திருந்தனர்

110 விதி: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்!

முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.முதல்வர் தனது உரையில், “தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாகவும், அனைத்து துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றவும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.  சமூக மேம்பாட்டிலும், தனி மனித வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும் வகையில் நாள்தோறும் பல திட்டங்களை தீட்டி வருகிறோம். அனைவரின் நலனை முன்னிறுத்தியே திட்டங்கள் தீட்டப்படுகிறது. இதுவரை … Read more

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து முதலமைச்சர் அறிவித்த அறிவிப்புகள்

 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த அறிவிப்புகள்…

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை!” முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு.. அடுத்த வருடம் முதல் அமல்

சென்னை: அடுத்த வருடம் முதல் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு உயர் கல்வி அல்லது பட்டயப்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்த திட்டத்திற்கு ரூ 698 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுமைப் பெண் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று … Read more

அரசுப் பள்ளிக்கு விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்.. மாணவர்களுக்கு சொன்ன சூப்பர் அட்வைஸ்.. என்ன தெரியுமா?

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பங்கேற்றார் .தொடர்ந்து இன்ற ராணிப்பேட்டை பாரதி … Read more

தேர்ச்சி பெறாதவர்கள் தளர வேண்டாம்..! வெற்றி காத்திருக்கிறது! மாணவர்களை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

  தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள், மேற்படிப்புகளில் கவனம் செலுத்தி உங்களது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மே 5 முதல் 30ஆம் தேதி வரை நடந்தது.12ஆம் வகுப்பு தேர்வை 8.3 லட்சம் பேர், 10-ம் வகுப்பு தேர்வை 9.5 லட்சம் பேர் … Read more

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. “அப்படியே டபுள்” உறுதியளித்தபடி உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்

  ரேஷன் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஜூன் 7ஆம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 28 சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  போராட்டம் … Read more