கடுமையான இதயநோய் குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவு தயாரிக்கும் முறை

 

*செம்பருத்திப் பூ பருப்புக் கஞ்சி :*

*தேவையான பொருட்கள் :*

நொய்யரிசி  – 100 கிராம்

சிறுபருப்பு    – 100 கிராம்

மிளகு             –  10

சீரகம்.           – கால்ஸ்பூன்

செம்பருத்திப் பூ  – 10

*செய்முறை:*

  *தேவையான அளவு தண்ணீர் எடுத்து அவற்றில் செம்பருத்திப் பூவைத் தவிர (நொய்யரிசி, சிறுபருப்பு, மிளகு, சீரகம்) ஆகியவற்றைச்  சேர்த்து  நன்றாக கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்த பின் அதில் செம்பருத்திப் பூவின் இதழ்களை நீக்கி நன்றாக அலசி கஞ்சியுடன் சேர்த்து நன்றாக கிளறி குழைய வேகவைத்து இறக்கி வைக்கவும்.*

 

*பயன்கள் :*

  *இந்த கஞ்சியை தினமும் ஒருவேளை உணவாக  குடித்து வந்தால் கடுமையான இதய நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த தீர்வு கிடைக்கும். மேலும்  உயர் ரத்த அழுத்தம்  மற்றும் உடல்  சூடு  குறைபாட்டை நீக்கும்  ஆற்றல்  தரும் அற்புதக் கஞ்சி.*

*இரவு படுக்கப் போகும் முன் :*

*வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.*

*குறிப்பு :*

*அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.*

Leave a Comment